செய்திகள்
சரத்குமார்

2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்- சரத்குமார் வேண்டுகோள்

Published On 2021-02-21 07:29 GMT   |   Update On 2021-02-21 07:29 GMT
2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இடைநிலை ஆசிரியர்களாக 2009-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பு பணிநியமனம் பெற்றவர்களுக்கு ஊதியம் ரூ.11,170 ஆகவும், ஜூன் மாதத்துக்கு பிறகு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.8000 ஆகவும் அடிப்படை ஊதியம் குறைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சார்பில் டிசம்பர், 2018 ல் டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு எனது ஆதரவை தெரிவித்திருந்தேன்.

2012 ஆம் ஆண்டு 13,000 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனம் பெற்றிருந்தாலும் அவர்களது உழைப்புக்கேற்ற ஊதியத்தை கோரி போராடும் போராட்டத்தில் உள்ள நியாயத்தினை உணர்ந்து அவர்களுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கிறது.

எனவே, முல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி"சம வேலைக்கு, சம ஊதியம்" கோரி மீண்டும் அறவழியில் இன்று போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சம ஊதியம் வழங்கிட ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News