செய்திகள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண் மாயமானது தொடர்பாக தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் அபிநயா (வயது 20) இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கினார். பின்னர் காலையில் பார்த்த போது அவரை காணவில்லை.
இதை தொடர்ந்து முருகேசன் தனது மகளை அவரது தோழிகள் மற்றும் உறவினர் வீட்டில் தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் அபிநயா கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகேசன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் அபிநயா (வயது 20) இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கினார். பின்னர் காலையில் பார்த்த போது அவரை காணவில்லை.
இதை தொடர்ந்து முருகேசன் தனது மகளை அவரது தோழிகள் மற்றும் உறவினர் வீட்டில் தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் அபிநயா கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகேசன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.