செய்திகள்
சுவரொட்டிகள் முழுவதும் அகற்றும் பணி நடந்து வருகிறது

பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த 12,289 சுவரொட்டிகள் அகற்றம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Published On 2021-07-10 02:55 GMT   |   Update On 2021-07-10 02:55 GMT
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மண்டலங்களில் சுவரொட்டிகள் முழுவதும் அகற்றும் பணி நடந்து வருகிறது.
சென்னை:

சென்னையை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல் உள்ளிட்ட அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குறிப்பாக அரசு சுவர்கள், பாலங்கள், தூண்கள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மண்டலங்களில் சுவரொட்டிகள் முழுவதும் அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்தவகையில் இதுவரை சென்னையில் 12 ஆயிரத்து 289 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,599 சுவரொட்டிகளும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 1,342 சுவரொட்டிகளும், அம்பத்தூர் மண்டலத்தில் 1,239 சுவரொட்டிகளும், அடையாறு மண்டலத்தில் 1,149 சுவரொட்டிகளும், வளசரவாக்கம் மண்டலத்தில் 1,014 சுவரொட்டிகளும் உள்பட அனைத்து மண்டலங்களிலும் அகற்றப்பட்டுள்ளது.

சென்னையின் அழகை சீர்குலைக்கும் வகையில், சென்னை முழுவதும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அனைத்தும் தொடர்ந்து அகற்றப்படும் எனவும், மீறி சுவரொட்டிகள் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News