செய்திகள்
திருட்டு

பூதலூர் அருகே ஒரே தெருவில் 2 வீடுகளில் 3½ பவுன்- ரூ.12 ஆயிரம் திருட்டு

Published On 2021-07-19 13:48 GMT   |   Update On 2021-07-19 13:48 GMT
பூதலூர் அருகே ஒரே தெருவில் 2 வீடுகளில் 3½ பவுன்- ரூ.12 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் அருகே உள்ள வீரமரசன்பேட்டை கிராமத்தில் காலனி தெருவில் வசித்து வருபவர் ராஜீவ்காந்தி (வயது35). விவசாயி. சம்பவத்தன்று இவருடைய வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.12 ஆயிரத்து 500, 2 கிராம் தாயத்து, வெள்ளிக் கொலுசுகளை திருடிச் சென்று விட்டனர். இதேபோல் இவருடைய வீட்டுக்கு அருகே உள்ள கந்தர்வகோட்டையை சேர்ந்த விஜயகுமார் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தூங்கி கொண்டிருந்தபோது வந்த மர்மநபர்கள் அவரிடம் இருந்து 1½ பவுன் சங்கிலி, 2 பவுன் கை சங்கிலி ஆகியவற்றை திருடிச்சென்றனர். இதுகுறித்து ராஜீவ்காந்தி, விஜயகுமார் ஆகிய 2 பேரும் பூதலூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே தெருவில் 2 வீடுகளில் நடந்த திருட்டு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News