செய்திகள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்

விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்- மருத்துவமனை தகவல்

Published On 2020-10-07 07:51 GMT   |   Update On 2020-10-07 09:59 GMT
விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இருவரும் குணம் அடைந்து மருத்துவமனையில்  இருந்து கடந்த 2ந்தேதி  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் விஜயகாந்த்  மீண்டும்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 “தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2வது கட்ட மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விஜயகாந்தின் உடல் நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.



இதையடுத்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சீரான திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கதிரியக்க மதிப்பீடு செய்யப்பட்டது. விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News