செய்திகள்
கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

Published On 2021-05-01 16:35 GMT   |   Update On 2021-05-01 16:35 GMT
திண்டுக்கல் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல்லை அடுத்த ராஜக்காபட்டி அருகே உள்ள ஆர்.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் குருநாதன் (வயது 60). அதே பகுதியை சேர்ந்தவர்கள் பெருமாள் (58), தங்கவேல் (38). இவர்கள் 3 பேரும் சேர்ந்து 13 வயது சிறுமியிடம் தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் குருநாதன் உள்பட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமிக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா பரிந்துரை செய்தார். அதன் பேரில் 3 பேரையும் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். 

இதையடுத்து குருநாதன் உள்பட 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News