வழிபாடு
கன்னியாகுமரி பகவதி அம்மன்

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம் அணிவித்து வழிபாடு

Published On 2022-02-18 08:44 GMT   |   Update On 2022-02-18 08:44 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, உச்சிகால பூஜை, தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவில் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி, 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News