செய்திகள்
கோடிகளை குவித்தாலும், நான் இப்படித் தான் - வைரலாகும் குத்துச்சண்டை வீரரின் புகைப்படம்
கெமரூன் நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகப் புகழ்பெற்ற குத்து சண்டை வீரரான பிரான்சிஸ் நிகானு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேஸ்புக்கில் இவர், மிக எளிமையாக காட்சியளிக்கும் வீட்டினுள் இருந்தபடி உணவு உண்ணும் புகைப்படம் பகிரப்பட்டு இருக்கிறது. இவர் இன்றும் எளிய வாழ்வை வாழ்வதாக பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.
"இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் நபரின் பெயர் பிரான்சிஸ் நீகான்னு... UFC fighter...
உலகப் புகழ்பெற்ற குத்து சண்டை வீரர்...
இந்த விளையாட்டு மூலம் கோடிக்கணக்கில் அவர் பணத்தை சம்பாதித்து விட்டார்...
அவரை காண பல விஐபிக்கள் மிகப்பெரிய வியாபார நிறுவனங்கள் காத்துக்கொண்டு உள்ளன...
ஆனால் அவர் சிறு வயதில் சரியாக சாப்பிடக்கூட முடியாத அளவில் ஏழ்மையில் இருந்தவர்...
இப்போதும் அவரது சொந்த நாட்டுக்கு கேமரூன் செல்லும்போது தனது பழைய வாழ்க்கை எப்படியோ அப்படியே வாழ்ந்து வருகிறார்...
அவர் சொல்லும் ஒரே வார்த்தை எவ்வளவு எனக்கு பணம் வந்தாலும் என் அம்மாவுக்கு நான் மகன்தான்...
அதை மாற்ற முடியாது..."
என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Happy Mother’s Day to this wonderful woman who has been through hell to raise a stubborn kid like me, and sacrificed everything to see us happy. #MothersDay ❤️ pic.twitter.com/4lMUeR0k3N
— Francis Ngannou (@francis_ngannou) May 10, 2020
இது குறித்த இணைய தேடல்களில் பிரான்சிஸ் நிகானு உண்மையில் தனது நாட்டில் ஏழ்மையான வாழ்வை வாழ்வது தெரியவந்தது. மேலும் கடந்த ஆண்டு அன்னையர் தினத்தன்று பிரான்சிஸ் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ட்விட்டரில் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருந்த பதிவு இணையத்தில் கிடைத்தது.
அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள தகவல் உண்மை தான். ஆனால், இந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.