செய்திகள்
கோப்பு படம்

துடியலூரில் அடுக்குமாடியில் விபசாரம் - மாறுவேடத்தில் சென்று பிடித்த போலீசார்

Published On 2020-01-09 11:08 GMT   |   Update On 2020-01-09 11:08 GMT
துடியலூரில் அருகே அடுக்குமாடியில் நடந்த விபசாரத்தை மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர்- சரவணம்பட்டி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பை கண்காணித்தனர். ஒரு போலீஸ்காரரை வாடிக்கையாளர் போல் மறுவேடத்தில் அனுப்பினர். மாறுவேடத்தில் சென்ற போலீஸ்காரர் அழகிகளை பார்க்க வேண்டும் என்று கேட்டார். அங்கிருந்த புரோக்கர்கள் வந்திருப்பது போலீஸ் என்று தெரியாமல் 2 அழகிகளை காண்பித்தனர். விபசாரம் நடப்பது உறுதி செய்த போலீஸ்காரர், இன்ஸ்பெக்டருக்கு சிக்னல் செய்தார். இதனையடுத்து போலீசார் குறிப்பிட்ட அறைக்குள் அதிரடியாக நுழைந்து அங்கிருந்த 2 அழகிகள் உள்பட 4 பேரை மடக்கிப்பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

விசாரணையில் சேலம் ஆத்தூரை சேர்ந்த வேலுமணி (வயது 52), சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (20) ஆகியோர் என்பதும் தப்பி ஓடியவர் செல்வம் என்பது தெரியவந்தது. பிடிபட்ட 2 புரோக்கர்களையும் கைது செய்த போலீசார் 2 பெங்களூர் அழகிகளை காப்பகத்தில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய செல்வத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News