செய்திகள்
பெரணமல்லூரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
பெரணமல்லூரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் சாவடி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று விஷத்தை குடித்து விட்டார். உடனடியாக அவரை செய்யாறு அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் அங்கிருந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திருநீலகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.