செய்திகள்
நெல்லையில் இன்று காங்கிரசார் பேரணி சென்றபோது எடுத்தபடம்.

விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு- அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

Published On 2021-11-24 09:50 GMT   |   Update On 2021-11-24 09:50 GMT
பா.ஜனதா அரசு அதானி, அம்பானி போன்றோருக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. இது மக்களுக்கான அரசாக செயல்படவில்லை என்று அகில இந்திய பொதுச்செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் கூறினார்.
நெல்லை:

விலைவாசி உயர்வு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் விழிப்புணர்வு பிரசார பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாளை அருங்காட்சியகம் அருகே இன்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் முன்னிலை வகித்தார். அகில இந்திய பொதுச்செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து அவர் கூறியதாவது:-

மத்திய பா.ஜனதா ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. பெட்ரோல்-டீசல் விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்டு உள்ளது.

பா.ஜனதா அரசு அதானி, அம்பானி போன்றோருக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. இது மக்களுக்கான அரசாக செயல்படவில்லை. விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் பேரணிக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News