ஆன்மிகம்
ராமநாதபுரத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா

ராமநாதபுரத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா

Published On 2021-11-23 03:47 GMT   |   Update On 2021-11-23 03:47 GMT
ராமநாதபுரத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழாவையொட்டி கடந்த 11 நாட்களாக மவுலீது ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களை சேர்ந்த இமாம்கள், உலமாக்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் பாசிப்பட்டரைத்தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் ஆண்டுதோறும் ரபீஉல் ஆகிர் மாதத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழாவை நடத்தி வருகின்றனர்.

இந்த விழாவையொட்டி கடந்த 11 நாட்களாக மவுலீது ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களை சேர்ந்த இமாம்கள், உலமாக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த் தனை நடத்தபட்டது. கந்தூரி விழாவையொட்டி நெய்சோறு வழஙகப்பட்டது.

விழாவில் ஜமாத் நிர்வாகத்தின் அறங்கா வலர்கள், மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News