வழிபாடு
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம்
திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் வருடாந்திர தெப்ப உற்சவத்தை முன்னிட்டு உற்சவர்களான சண்டிகேஸ்வரர், சந்திரசேகர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் நடந்து வந்தது. அதன் நிறைவு நாளான நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் மண்டபத்தில் ஏகாந்தமாக உற்சவர்களான சண்டிகேஸ்வரர், சந்திரசேகர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேவஸ்தான வேத பண்டிதர்கள் கோவிலில் வேத பாராயணம் செய்தனர். தேவஸ்தான அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்களின் சங்கீர்த்தனம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
உற்சவத்தில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கோவில் கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர் ரெட்டிசேகர் மற்றும் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உற்சவத்தில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கோவில் கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர் ரெட்டிசேகர் மற்றும் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.