ஆன்மிகம்
சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு அருகில் செய்ய சொல்வதற்கான காரணம்

சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு அருகில் செய்ய சொல்வதற்கான காரணம்

Published On 2020-08-27 09:52 GMT   |   Update On 2020-08-27 09:52 GMT
சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வெளியே தான் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வெளியே தான் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு இரண்டு காரணங்களை சொல்வது வழக்கம்.

ஒன்று நாம் காலை பின்புறமாக நீட்டி நமஸ்காரம் செய்யும் போது, கால்பக்கம் தெய்வ சந்நிதிகள் எதுவும் இருக்க கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் வேறு சந்நிதிகள் இருக்காது என்பதால் அந்த இடத்தில் நமஸ்காரம் செய்கிறோம்.

மற்றொன்று கொடி மரத்தின் அருகில் பலிபீடம் இருக்கும். நம் மனதிலுள்ள ஆணவம், பேராசை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை நமஸ்காரம் செய்யும் போது பலியிடுவதாக அதாவது அகற்றிக் கொள்வதாக நமஸ்காரம் செய்கிறோம். இதனால் சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடிமரத்திற்கு வெளியே தான் செய்ய வேண்டும்.
Tags:    

Similar News