தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் சாம்சங் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2019-04-16 05:24 GMT   |   Update On 2019-04-16 05:24 GMT
சாம்சங் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Samsung



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் qHD ஸ்கிரீன், எக்சைனோஸ் 7870 சிப்செட், 1 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை கோ எடிஷன் இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 5 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. 



சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் சிறப்பம்சங்கள்:

- 5.0 இன்ச் 540x960 பிக்சல் qHD TFT டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
- மாலி T830 GPU
- 1 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்)
- டூயல் சிம் ஸ்லாட்
- 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மாப்ட்போன் விலை ரூ.5,290 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News