செய்திகள்
நகை பறிப்பு

பஞ்சப்பள்ளியில் மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை பறிப்பு

Published On 2021-10-17 11:56 GMT   |   Update On 2021-10-17 11:56 GMT
பஞ்சப்பள்ளியில் மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை சேர்ந்தவர் சித்தன். இவருடைய மனைவி கரியம்மாள் (வயது80). இவர் நேற்று தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் பூக்கள் பறித்து கொண்டிருந்தார். அப்போது முகவரி கேட்பது போல் தோட்டத்திற்குள் வந்த ஒரு வாலிபர் திடீரென கரியம்மாளை தாக்கி கீழே தள்ளி அவரது முகத்தை துணியால் சுற்றி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்த புகாரின்பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News