செய்திகள்
கைது

காரில் கடத்திய ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் - வாலிபர் கைது

Published On 2019-08-16 09:35 GMT   |   Update On 2019-08-16 09:35 GMT
செங்குன்றம் அருகே காரில் கடத்திய ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சோலையம்மன் நகர் 20-வது தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்.

அவரது காரில் செம்மரக்கட்டைகள் கடத்திவரப்பட்டுள்ளதாக செங்குன்றம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர் போலீசாருடன் மோகன்ராஜின் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்.

அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் சோதனை செய்தபோது அதில் செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த 1 டன் எடையுள்ள செம்மரக்கடைகளை பறிமுதல் செய்து மோகன் ராஜை போலீசார் கைது செய்தனர். செம்மரக்கட்டைகளை கடத்த பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். கைதான மோகன் ராஜ், மண்ணடியை சேர்ந்த ஒருவருக்கு செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.


Tags:    

Similar News