செய்திகள்
கைது

மயிலாடுதுறையில் முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2021-04-17 10:55 GMT   |   Update On 2021-04-17 10:55 GMT
மயிலாடுதுறையில் முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை திருவிழந்தூர் நீடூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரூபன் சார்லஸ் (வயது 52). முன்னாள் ராணுவ வீரரான இவர், மயிலாடுதுறை நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அரசு மருத்துவமனை சாலையில் சென்றபோது 4 கால் மண்டபம் அருகே சாலை குறுக்கே 2 பேர் நின்று பேசி கொண்டிருந்தனர்.

அப்போது வழியை விட்டு ஓரமாக நின்று பேசுங்கள் என்று ரூபன் சார்லஸ் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும் சேர்ந்து ரூபன் சார்லசை திட்டியதோடு கற்களால் அடித்து தாக்கியுள்ளனர்.

இதில் ரூபன் சார்லசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த ரூபன் சார்லஸ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக ரூபன் சார்லஸ் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் வழக்கு தொடர்பாக திருவிழந்தூர் தோப்பு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சாமிநாதன் (39), அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராஜேந்திரன் (38) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News