வழிபாடு
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரிக்கு 1,008 சங்காபிஷேகம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரிக்கு 1,008 சங்காபிஷேகம்

Published On 2021-12-14 03:59 GMT   |   Update On 2021-12-14 03:59 GMT
திருவானைக்காவல் கோவில் வளாகத்தில் உள்ள வெளிநடராஜர் மண்டபத்தில் 1,008 வலம்புரி சங்குகள் லிங்க வடிவம் மற்றும் வட்டப்பாதையில் சுற்றி வைக்கப்பட்டது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கார்த்திகை மாத 4-வது சோமவார விழாவையொட்டி ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு 1,008 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள வெளிநடராஜர் மண்டபத்தில் 1,008 வலம்புரி சங்குகள் லிங்க வடிவம் மற்றும் வட்டப்பாதையில் சுற்றி வைக்கப்பட்டது.

அதன் மையத்தில் தங்கபிடிப்போட்ட வலம்புரி சங்கு வைக்கப்பட்டு அனைத்து சங்குகளிலும் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் நிரப்பப்பட்டது. பின்னர் அந்த சங்குகளில் மாவிலைகள் மற்றும் பூக்கள் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் கணபதி ஹோமம் செய்து சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர். பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் தங்கபிடிப்போட்ட சங்கில் உள்ள புனித நீர் முதல் பிரகாரம் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதே போல் மீதமுள்ள சங்கில் உள்ள புனிதநீர் எடுத்து செல்லப்பட்டு ஜம்புகேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் அர்த்தஜாம பூஜை நடைபெற்றது.
Tags:    

Similar News