உள்ளூர் செய்திகள்
குண்டர் சட்டத்தில் கைதானவர்கள்.

சாராயம் விற்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-01-11 09:34 GMT   |   Update On 2022-01-11 09:34 GMT
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தெற்காலத்தூரை சேர்ந்த சாரதா, தேவூர் ராதாமங்கலம் பூங்கொடி, சங்கமங்கலத்தை சேர்ந்த கந்தன், சிக்கல் பனைமேட்டை சேர்ந்த ரஞ்சித் இவர்கள் 4 பேரும் நீண்ட நாட்களாக இப்பகுதிகளில் சாராயம் விற்பனை செய்து வந்தனர்.

இவர்கள் மீது சாராயம் விற்பனை தொடர்பாக கீழ்வேளூர் போலீஸ் நிலையம் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவிலும் பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் சாரதா, பூங்கொடி மீது சாராயம் விற்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு திரூவாரூர் மகளிர் சிறையிலும், கந்தன், ரஞ்சித் சாராயம் விற்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கைது செய்யபட்டு நாகை மாவட்ட சிறையில் இருந்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹருக்கு பரிந்துரை செய்தனர். 

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிக்கு பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News