செய்திகள்
எருமப்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம்
எருமப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் பேரூராட்சி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
எருமப்பட்டி:
எருமப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் பேரூராட்சி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமில் துணை சுகாதார நிலைய டாக்டர் லலிதா மேற்பார்வையில் செவிலியர்கள் தடுப்பூசி போட்டனர். அதன்படி பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாமலை, இளநிலை உதவியாளர் தேவராஜ், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.