செய்திகள்
காசி

தமிழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் காசியில் தவிப்பு

Published On 2020-03-26 11:19 GMT   |   Update On 2020-03-26 11:19 GMT
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்ற 100-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் காசியில் தவித்து வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:

சென்னை திருவேற்காடு, ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 14 பேர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வட மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர்.

அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு காசிக்கு திரும்பி வந்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர்களால் சொந்த ஊர்களுக்கு திரும்பி வர முடியவில்லை.

அனைவரும் காசியில் உள்ள குமாரசாமி மடத்தில் தங்கி உள்ளனர். இதே போல் பெரம்பலூர், கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 90-க்கும் மேற்பட்டோர் காசிக்கு சுற்றுலா வந்து வெளியில் செல்ல முடியாமல் அதே மண்டபத்தில் தங்கி உள்ளனர்.

வெளியே எங்கும் செல்ல முடியாததால் அவர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கும் மேல் உள்ளவர்கள். இது தொடர்பாக காசியில் சிக்கி இருக்கும் மல்லிகா என்பவர் கூறும்போது, ‘காசிக்கு சுற்றுலா வந்து நாங்கள் சிக்கிக்கொண்டோம். நாங்கள் சொந்த ஊர் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு அறையின் வாடகை ரூ. 600 ஆகும். இங்கு நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்’ என்றார்.
Tags:    

Similar News