ஆன்மிகம்
கொடிமரம்

கோவிலில் கொடிமரம் இருப்பதன் தத்துவம்

Published On 2020-11-10 08:08 GMT   |   Update On 2020-11-10 08:08 GMT
"ஆலயம் புருஷாகாரம்' என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது "மனித உடலைப் போன்றது கோவில்' என்பது இதன் பொருள்.
"ஆலயம் புருஷாகாரம்' என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது "மனித உடலைப் போன்றது கோவில்' என்பது இதன் பொருள். கோவிலில் கருவறையே தலை. மகா மண்டபம் மார்புப் பகுதி, மார்பின் இடப்புறம் இதயம் துடிப்பது போல, நடராஜப் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்புள் பகுதியாக இருப்பது கொடிமரம். ராஜகோபுரம் இறைவனின் திருவடி. திருவிழா காலத்தில் தேவர்களை அழைப்பதற்காக கொடிமரத்தில் கொடியேற்றி வழிபாடு நடத்துவர்.
Tags:    

Similar News