செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 188 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக நேற்று யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.