செய்திகள்
ஐபிஎல் தொடரில் அதிவேகமக 2000 ரன்: சச்சினை பின்னுக்குத் தள்ளி முதல் இந்திய வீரர் ஆனார் கேஎல் ராகுல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக 132 ரன்கள் விளாசிய கேஎல் ராகுல், அதிவேகமாக 2 ஆயிரம் ரன்னைக் கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 206 ரன்கள் குவித்தது. தொடக்க பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் விளாசினார்.
இந்த போட்டியின்போது கேஎல் ராகுல் இரண்டாயிரம் ரன்னைக் கடந்தார். 2 ஆயிரம் ரன்னைக் கடக்க அவருக்கு 60 இன்னிங்ஸ் தேவைப்பட்டுள்ளது. இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 63 இன்னிங்சில் கடந்து அதிவேகமாக கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். தற்போது கேஎல் ராகுல் அந்த பெருமையை தட்டிப்பறித்துள்ளார். கிறிஸ் கெய்ல் 43 இன்னிங்சில் கடந்த முதல் இடத்தில் உள்ளார்.