செய்திகள்
தற்கொலை

கபிஸ்தலம் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-03-24 09:18 GMT   |   Update On 2021-03-24 09:18 GMT
கபிஸ்தலம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே இளங்கார்குடி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கேசவன் (வயது 47) விவசாயி. இவரது மனைவி அஜித்தா (37), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கேசவன் நீண்ட நாளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்த கேசவன் வீட்டிற்கு பின்புறம் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அஜித்தா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News