உள்ளூர் செய்திகள்
டி. என். பாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி. என். பாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் ரெட்டியூரை சேர்ந்த குமார் (வயது 30) இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் இருந்து லாரியில் அட்டைகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்றார்.
ஈரோடு மாவட்டம் அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் உள்ள பங்களாப்புதூர் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் சாலையில் சென்று கொண்டிருந்த டி.என்.பாளையம் பெருமாள் கவுண்டர் வீதியை சேர்ந்த சையத்ரகமத்துல்லா (வயது 65) என்பவர் மீது மோதியதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த பங்களாப்புதூர் போலீசார் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.