செய்திகள்
கோப்புப்படம்

காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2020-10-20 19:33 GMT   |   Update On 2020-10-20 19:33 GMT
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹர்கிரிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் பாதுகாப்பு படையினர் காஷ்மீர் சிறப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதேபோல காஷ்மீரின் சோபியான் மாவட்டத்திலும் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதற்கிடையே, காஷ்மீரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

அவர்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். மேலும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவாமல் இருக்க தற்காலிகமாக இணையதள சேவை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News