உள்ளூர் செய்திகள்
ஆற்காடு அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை
ஆற்காடு அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது23), எலக்ட்ரீசியன். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் கட்டி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கு சுமார் ரூ.3 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடன் சுமையால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த யுவராஜ் நேற்று வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேல்விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.