ஆன்மிகம்
தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்ததை படத்தில் காணலாம்.

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2021-01-25 06:08 GMT   |   Update On 2021-01-25 06:08 GMT
சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழாவையொட்டி கடந்த 15-ந் தேதி தை மாத முதல் வெள்ளி அன்று கொடியேற்றப்பட்டது. இதனையடுத்து 22-ந் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேர் திருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் புற்றடி மாரியம்மன் எழுந்தருளினார். இதனையடுத்து கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க நான்கு வீதிகளில் தேர் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்பட ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News