ஆன்மிகம்
திருச்சி மகாமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்

திருச்சி மகாமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்

Published On 2021-03-18 03:43 GMT   |   Update On 2021-03-18 03:43 GMT
திருச்சி மகாமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க யானை மீது வைத்தபடியும், தலையில் சுமந்தபடியும், திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
திருச்சி கம்பரசம்பேட்டை, பெரியார்நகரில் உள்ள மகாமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 10-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி நேற்று காலை காவிரி ஆற்றில் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து மேளதாளங்கள் முழங்க யானை மீது வைத்தபடியும், தலையில் சுமந்தபடியும், திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்தனர். அதனைத்தொடர்ந்து இரவு கரகம் வீதி உலா சென்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News