செய்திகள்
கொள்ளை

கோவையில் தொழிலதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் தங்க- வைர நகைகள் கொள்ளை

Published On 2019-09-28 10:29 GMT   |   Update On 2019-09-28 10:29 GMT
கோவையில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:

கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 72). தொழிலதிபர்.

பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெரும்பாலும் தரைதளத்திலேயே இருந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று முதல்மாடியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்த கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ.25 லட்சம் தங்க- வைர நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளது இன்று தெரியவந்தது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News