செய்திகள்
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28-ந்தேதி ஏலம்
ஏலம் எடுக்க விரும்பும் பொதுமக்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு சென்று இன்ஸ்பெக்டர் அனுமதி பெற்று வாகனங்களை பார்வையிடலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தெற்கு போலீஸ் நிலையம், நல்லூர் மற்றும் வீரபாண்டி ஆகிய போலீஸ் நிலைய போலீசாரால் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாமல் உள்ள, 366 மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்பட உள்ளது.
இந்த ஏலம் திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் வருகிற 28-ந்தேதி மதியம் 2 மணிக்கு நடக்க உள்ளது.
ஏலம் எடுக்க விரும்பும் பொதுமக்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு சென்று இன்ஸ்பெக்டர் அனுமதி பெற்று வாகனங்களை பார்வையிடலாம். ஏலம் விடப்படும் வாகனங்களுக்கு உரிய ஆவணம் வழங்க பரிந்துரை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.