செய்திகள்
மின்சார நிறுத்தம்

காரைக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-11-19 14:09 GMT   |   Update On 2021-11-19 14:09 GMT
காரைக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
காரைக்குடி:

காரைக்குடி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங் போர்டு, செக்காலை கோட்டை, பாரி நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பஸ் நிலையம், கல்லுகட்டி, பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News