செய்திகள்
கோப்புபடம்

தபால் துறை மூலம் வாகனங்களுக்கு காப்பீடு

Published On 2021-07-10 09:53 GMT   |   Update On 2021-07-10 09:53 GMT
முதல் கட்டமாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
திருப்பூர்:

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மோட்டார் சைக்கிள்-கார்களுக்கு காப்பீடு வழங்கும் புதிய சேவையை நாடு முழுவதும் தபால் துறை தொடங்கியுள்ளது.

அதன்படி பஜாஜ் அலையன்ஸ், டாடா ஏ.ஐ.ஜி., ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வாகனங்களுக்கு காப்பீடு வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
 
தபால்துறை வாடிக்கையாளர்கள், தபால் நிலையங்களில் நேரடியாகவும் இந்திய போஸ்டல் பேமண்ட் பேங்க் வாயிலாகவும் வாகனத்துக்கு காப்பீடு பெற்று கொள்ளலாம். கூடுதல் ஆவணங்களின்றி விரைவாக காப்பீடு வழங்கப்படும் என திருப்பூர் தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News