உள்ளூர் செய்திகள்
டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
மொடக்குறிச்சி அருகே டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் அருகே உள்ள மண்கரடு, செல்வம் நகரை சேர்ந்தவர் சங்கர் (37). இவரது மனைவி பூங்கொடி. சங்கர் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். பூங்கொடி கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் சங்கருக்கு உடல்நலப் பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்த வந்தார். இந்நிலையில் மீண்டும் கடந்த 6 மாதமாக உடல்நிலை பிரச்சினையால் அவதி அடைந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு களைப்புடன் சங்கர் வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள தகர செட்டில் அமர்ந்திருந்தார். அப்போது பூங்கொடி வந்து கேட்டபோது தனக்கு களைப்பாக இருப்பதால் சற்று ஓய்வு எடுத்து வருவதாக கூறினார்.
பின்னர் பூங்கொடி சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தபோது சங்கர் தகர ஷீட்டில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
உடனடியாக சங்கரை மீட்டு சிகிச்சைக்காக எழுமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.