ஆன்மிகம்
திருமலையில் தன்வந்திரி பூஜை

திருமலையில் தன்வந்திரி பூஜை

Published On 2020-12-14 02:33 GMT   |   Update On 2020-12-14 02:33 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் தன்வந்திரி பகவானை வைத்து, வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத தன்வந்திரி பூஜை நடத்தப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் விஷ்ணு பூஜை நடந்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக நேற்று காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை கோவிலில் இருந்து ஊர்வலமாக வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்து, உற்சவர்களின் முன்னிலையில் தன்வந்திரி பகவானை வைத்து, வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத தன்வந்திரி பூஜை நடத்தப்பட்டது. 

அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். தன்வந்திரி பூஜை உலக மக்கள் நலனுக்காக நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News