விளையாட்டு
ரபேல் நடால்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்

Published On 2022-05-04 20:44 GMT   |   Update On 2022-05-04 20:44 GMT
மகளிர் கால் அரையிறுதி ஆட்டத்திற்கு துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் முன்னேறி உள்ளார்.
மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில்  நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை மாட்ரிட் சாம்பியனானான ரபேல் நடால் - செர்பியாவின் கெக்மனோவிச் .ஆகியோர் மோதினர் .

காயத்தில் இருந்த மீண்டும் விளையாட்டிற்கு திரும்பிய நிலையில்  நடால் இந்த போட்டியில் பங்கேற்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 6-1 ,7-6  என்ற செட் கணக்கில் கெக்மனோவிச்- ஐ வீழ்த்திய ரபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் .

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால்இறுதி சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீருடன் மோதினார்.  

இந்த போட்டியில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஹாலெப்பை வீழ்த்தி வெற்றி பெற்ற ஒன்ஸ் ஜபீர் அரைஇறுதிக்கு முன்னேறினார்.
Tags:    

Similar News