ஆன்மிகம்
களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவை

களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவை

Published On 2021-03-26 04:23 GMT   |   Update On 2021-03-26 04:23 GMT
களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வரதராஜபெருமாளும், வெங்கடாஜலபதி சுவாமிகளும் விஷேச அலங்காரத்தில் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர்.
களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினசரி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 5-ம் திருநாளன்று சிறப்பு நிகழ்ச்சியாக கருட சேவை நடந்தது.

இதனை முன்னிட்டு வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து வரதராஜபெருமாளும், வெங்கடாஜலபதி சுவாமிகளும் விஷேச அலங்காரத்தில் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

நாளை (சனிக்கிழமை) இரவில் வரதராஜபெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 29-ந் தேதி நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News