ஆன்மிகம்
திருவிளக்கு பூஜை

நித்யகல்யாணி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2020-11-02 04:07 GMT   |   Update On 2020-11-02 04:07 GMT
செங்கோட்டை இலத்தூர் சாலையில் அமைந்துள்ள நித்யகல்யாணி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி மாதாந்திர பவுர்ணமி பூஜை, திருவிளக்கு பூஜை நடந்தது.
செங்கோட்டை இலத்தூர் சாலையில் அமைந்துள்ள நித்யகல்யாணி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி மாதாந்திர பவுர்ணமி பூஜை, திருவிளக்கு பூஜை நடந்தது. இந்து கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பொன்னுத்துரை தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மணிமகேசுவரன், மாவட்ட பொருளாளர் முத்து, துணை பொருளாளர் கோபக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் நடராஜன் வரவேற்று பேசினார்.

ஐந்தருவி அன்னை சாரதாதேவி ஆசிரம நிர்வாகி யதீஸ்வரி ஆத்மப்ரியா திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். முன்னதாக நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மாவட்ட செய்தி தொடர்பாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.
Tags:    

Similar News