செய்திகள்
வன்முறையாக மாறிய போராட்டம்: சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் அவசரநிலை பிரகடனம்
சிலி நாட்டில் ரெயில், பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டம் வன்முறையாக மாறியதால் தலைநகர் சாண்டியாகோவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
சாண்டியாகோ:
தென்னமெரிக்கா கண்டத்தின் கடைக்கோடி மேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்னஞ்சிறு அழகிய நாடு சிலி. சுமார் ஏழரை லட்சம் பரப்பளவு கொண்ட வளமிக்க இந்நாட்டில் சுமார் ஒரு கோடியே 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
சமீபத்தில் இந்நாட்டில் அரசின் நிர்வாகத்தில் உள்ள ரெயில் மற்றும் பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து கட்டணங்கள் பலமடங்காக உயர்த்தப்பட்டன. இந்த கட்டண உயர்வை கண்டித்து சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோ உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சில பகுதிகளில் ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள் எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் வெடித்த மோதலில் சிலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், தலைநகர் சாண்டியாகோ, சக்காபுகோ, பியூண்டே அல்ரோ மற்றும் சான் பெர்னார்டோ உள்ளிட்ட பகுதிகளில் ‘எமர்ஜென்சி’ எனப்படும் அவசரநிலை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா இன்று அறிவித்துள்ளார்.
மேலும், மக்களின் போராட்டத்துக்கு காரணமான உயர்த்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக விவாதித்து அரசுக்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னமெரிக்கா கண்டத்தின் கடைக்கோடி மேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்னஞ்சிறு அழகிய நாடு சிலி. சுமார் ஏழரை லட்சம் பரப்பளவு கொண்ட வளமிக்க இந்நாட்டில் சுமார் ஒரு கோடியே 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
சமீபத்தில் இந்நாட்டில் அரசின் நிர்வாகத்தில் உள்ள ரெயில் மற்றும் பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து கட்டணங்கள் பலமடங்காக உயர்த்தப்பட்டன. இந்த கட்டண உயர்வை கண்டித்து சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோ உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதால் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களை தாக்கி சூறையாடினர்.
சில பகுதிகளில் ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள் எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் வெடித்த மோதலில் சிலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், தலைநகர் சாண்டியாகோ, சக்காபுகோ, பியூண்டே அல்ரோ மற்றும் சான் பெர்னார்டோ உள்ளிட்ட பகுதிகளில் ‘எமர்ஜென்சி’ எனப்படும் அவசரநிலை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா இன்று அறிவித்துள்ளார்.
மேலும், மக்களின் போராட்டத்துக்கு காரணமான உயர்த்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக விவாதித்து அரசுக்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.