உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் அருகே புகையிலை வைத்திருந்தவர் கைது
நாகர்கோவில் அருகே குமாரபுரத்தில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.கொற்றி கோடு சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் தலைமையிலான போலீசார் குமாரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருந்த கார்லூஸ் 57 என்பவர் மீது கொற்றிகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.