ஆன்மிகம்
நடராஜர் கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை 12-ந் தேதி நடக்கிறது
மணவாளக்குறிச்சி அருகே தருவை நடராஜர் கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
மணவாளக்குறிச்சி அருகே தருவை நடராஜர் கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு கந்த சஷ்டி கவசம், 6 மணிக்கு சிவபுராணம், 6.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடக்கிறது. விழாவில் சமுதாய தலைவர் சோமசுந்தரம், மூத்த உறுப்பினர் சத்தியசீலன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.
ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் ராஜாராம் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துகிறார். இரவு 8 மணிக்கு பஜனை, 9 மணிக்கு திருக்கம் சாத்துதல், இரவு 9.15 மணிக்கு அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.