செய்திகள்
கோப்பு படம்

மண்ணச்சநல்லூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி

Published On 2021-10-15 14:57 GMT   |   Update On 2021-10-15 14:57 GMT
மண்ணச்சநல்லூர் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்ணச்சநல்லூர்:

மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையம் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி லட்சுமி (வயது 45). இவர் நேற்று இரவு தனது வீட்டு அருகே நடந்து சென்றார். அப்போது பாம்பு கடித்து விட்டது. இதனால் லட்சுமி அலறியபடி மயங்கி விழுந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News