லைஃப்ஸ்டைல்
பச்சிமோஸ்தாசனம்

மாதவிடாய் பிரச்சனையை தீர்க்கும் பச்சிமோஸ்தாசனம்

Published On 2019-11-25 03:17 GMT   |   Update On 2019-11-25 03:17 GMT
பெண்கள் மாதவிடாய் பிரச்சனையிலிருந்து விடுதலையடைய ஓர் அழகான, அருமையான யோகாசனத்தை தினமும் செய்து வந்தால் மாதவிடாய் சுழற்சி சரியாக வரும்.
பெண்கள் மாதவிடாய் பிரச்சனையிலிருந்து விடுதலையடைய ஓர் அழகான, அருமையான யோகாசனத்தை தினமும் செய்து வந்தால் மாதவிடாய் சுழற்சி சரியாக வரும். கருப்பை பிரச்சனை வராது. மலட்டுத் தன்மை நீங்கும். செக்ஸ் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடலும், மனமும் வளமாக இருக்கும். நன் மக்களை சமுதாயத்திற்கு வழங்கலாம்.

பச்சிமோஸ்தாசனம் என்ற யோகாசனத்தை எல்லாப் பெண்களும் பயில வேண்டும். உங்கள் குழந்தைக்கு இதனை இளம் வயதிலேயே பயிற்றுவிக்க வேண்டும். நிச்சயமாக வளர்ந்து பூப்பெய்தும் பொழுது உடலில் மாதவிடாய் சுழற்சி சம்மந்தமான பிரச்சனை வராது. கருப்பை பிரச்சனை வராது. திருமணமானால் சுகப்பிரசவம் நடக்கும். பிரசவித்தப் பின்னும் இதனை பயின்று இளமையுடன் வாழலாம்.

செய்முறை

விரிப்பில் கால்களை நீட்டி கிழக்கு திசை நோக்கி அமரவும். கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து மடிக்காமல் தலைக்கு மேல் உயர்த்தவும். மெதுவாக முன்னால் குனிந்து கால்களை மடிக்காமல் கால் விரல்களை தொட முயற்சிக்கவும். இரு கைவிரல்களாலும் இரு கால்விரல்களை தொட முயற்சிக்கவும். பின் கால் கட்டைவிரல்களைப் பற்றி மேலும் குனிந்து நெற்றியை கால் முட்டிகளின் மீது வைத்து கைகளை மடித்து கை முட்டியை விரிப்பின் மீது வைக்கவும்.

மூச்சை வெளிவிட்டு குனிகிறோம். மூச்சை அடக்கி ஒரு பத்து விநாடிகள் இருக்கவும். பின் மூச்சை வெளிவிட்டு கட்டை விரலை பிரித்து கைகளை நீட்டி மெதுவாக எழுந்து நிமிர்ந்து உட்காரவும்.

இவ்வாறு மூன்று முறைகள் செய்யவும். முதலில் பயிற்சி செய்யும் பொழுது கால் விரலைத் தொடுவதே சிரமமாக இருக்கும். ஒரு மூன்று மாதங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் உங்களால் முழுமை நிலையினை அடைய முடியும்.

குறிப்பு

அடி முதுகு வலி, முதுகுத் தண்டு கோளாறு உள்ளவர்கள் இவ்வாசனம் செய்ய வேண்டாம். கல்லீரல், மண்ணீரல் வீக்கம், அல்சர் நோய் உள்ளவர்கள் யோகாசன வல்லுநரின் நேரடி ஆலோசனையின் படி பயிற்சி செய்யவும்.

பலன்கள்

பெரும்பாலும் பெண்களுக்கு சிறுநீரகம் மற்றும் கருப்பை வழியாகவே வியாதிகள் தோன்றும். இந்த ஆசனத்தை செய்வதின் மூலமாக தங்கள் உடலில் பூரண ஆரோக்கியத்தை அடையலாம். கருப்பையில் தோன்றும் வியாதிகள் யாவும் சரியாகும். பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் அடிவயிற்று பெருக்கத்தை இந்த ஆசனம் சரி செய்துவிடும்.

உடலுறவில் நாட்டமில்லாத மணமான பெண்கள் கணவனுக்குரிய சுகத்தை தரமுடியாதவர்கள் இவ்வாசனம் செய்தால், அதற்குரிய ஹார்மோன்கள் சரியாக சுரக்கும். அதனால் செக்ஸ் சம்மந்தமான குறைபாடுகள் நீங்கும்.

சிறு வயதிலிருந்து தொடர்ந்து செய்தால் 60 வயது ஆன பிறகும் தோல்களில் சுருக்கங்களோ, முடி நரைப்போ ஏற்படாது என்று யோக சாஸ்திரம் கூறுகின்றது.
சிறுநீரகம் சம்மந்தமான குறைபாடுகள் நீங்கும். தொடர்ந்து செய்தால் மஞ்சள் காமாலை, புற்றுநோய் வராது. நுரையீரல் பலப்படும், தசைவலி, வாதக்கோளாறுகள் நீங்கும். பசியின்மை, நீரிழிவு, மலச்சிக்கல் நீங்கும். நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறுகின்றது. ஆண்களுக்கு விந்து ஒழுக்கை தடுக்கும்.

பெண்களின் எண்ணங்கள் திடப்படும். மனோதைரியம் கிடைக்கும். நேர்மையான எண்ணங்கள் பிறக்கும். இந்த ஆசனம் பெண்களுக்கும், ஆண்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் ஆனந்த வாழக்கையும் அளிக்க வல்லது. குறிப்பாக நாளைய சமுதாயத்தை வளப்படுத்தும் பெண்களுக்கு மிகச் சிறந்த ஆசனமாகும். குடும்பத்துடன் பயிலுங்கள். உங்கள் குழந்தைகளை இளம் வயதிலேயே பழக்கி இன்புற்று வாழச் செய்யுங்கள்.
Tags:    

Similar News