செய்திகள்

ஆர்.கே நகரில் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவு: 77 % வாக்குகள் பதிவு என தேர்தல் அதிகாரி தகவல்

Published On 2017-12-21 14:29 GMT   |   Update On 2017-12-21 14:29 GMT
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளதாகவும், 77 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 5 மணியளவில் நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்த நிலையில், வரிசையில் காத்திருப்பவர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டது.

கூட்டம் அதிகமாக இருப்பதால் சுமார் 10 வாக்குச்சாவடிகளில் 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முழுமையாக வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், மொத்தமுள்ள 258 வாக்குச்சாவடிகளில் 77 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஓட்டு பதிவு முடிந்ததும் ஓட்டு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான ராணி மேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
Tags:    

Similar News