செய்திகள்
சூளகிரி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
சூளகிரி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குருபரப்பள்ளி, காமன்தொட்டி, சூளகிரி துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே குருபரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, கக்கன்புரம், சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், எப்ரி, தம்மண்டரப்பள்ளி, சூளகிரி நகரம், மாதரசனப்பள்ளி, உலகம், ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.