ஆன்மிகம்
நரசிம்மர்

நரசிம்மரை வழிபடும் போது மறக்கக்கூடாதவை

Published On 2021-09-29 07:06 GMT   |   Update On 2021-09-29 07:06 GMT
பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற விரைந்து வருபவர் என்பதால், நரசிம்மரை வழிபடுபவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட நரசிம்மரைப் பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பிரகலாதனுக்காக தூணில் இருந்து வெளிப்பட்டவர், நரசிம்ம மூர்த்தி. பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற விரைந்து வருபவர் என்பதால், நரசிம்மரை வழிபடுபவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட நரசிம்மரைப் பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

நரசிம்மம் என்பதற்கு ‘ஒளிப்பிளம்பு’ என்று பொருள். திருமால் எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் உக்கிரமானதாக, இந்த அவதாரம் இருக்கிறது. ஆனாலும் பக்தர்கள் பலரும் விரும்பி வழிபடக் கூடிய தெய்வமாகவும் நரசிம்மரே இருக்கிறார்.

வீட்டின் பூஜை அறையில் வைத்து நரசிம்மரை வழிபடும்போது, அவரது உருவ படத்தை வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுங்கள்.

நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள், பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

சிவப்பு அரளிப் பூ மற்றும் செம்பருத்தி பூ, நரசிம்மருக்கு பிடித்தமானவை. எனவே பூஜையில் அந்த பூக்களை வைத்து வழிபடலாம்.

நரசிம்மரை தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால், எந்தவிதமான திருஷ்டி தோஷமும் ஏற்படாது.

நரசிம்மரின் அருளைப் பெற நினைப்பவர், ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் பிரகலாத சரித்திரத்தை பாராயணம் செய்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.

எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பாக விநாயகரை வழிபடுவது போல, நரசிம்மரையும் தரிசித்துவிட்டுச் சென்றால், அந்தக் காரியம் வெற்றியாகும். எதிரி களின் தொல்லை நீங்கும்.

நரசிம்மரை வழிபடுபவர்கள், பக்த பிரகலாதன் கொண்டிருந்த பக்தியைப் போல, நரசிம்மர் மீது பக்தி கொண்டிருக்க வேண்டும். அப்போது நரசிம்மர் விரைந்து வந்து நன்மைகளை வாரி வழங்குவார்.

இந்தியா முழுவதும் நரசிம்ம மூர்த்தி வழிபாடு இருந்தாலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களில், நரசிம்மருக்கு சிறப்பும் பெருமையும் மிக்க தனிக் கோவில்கள் அமையப்பெற்றுள்ளன.

நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் காட்சி தருகிறார். இரணியகசிபுவை வதம் செய்யும் கோலத்தில் ‘வீர நரசிம்மர்’ என்ற பெயரிலும், மகாலட்சுமியை மடியில் வைத்திருக்கும்போது, ‘லட்சுமி நரசிம்மர்’ என்ற திருநாமத்துடனும், இரு கால்களையும் மடக்கி, யோக முத்திரையோடு அமர்ந்திருக்கும்போது, ‘யோக நரசிம்மர்’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.

நரசிம்மர் திருக்கோவில்கள் பெரும்பாலும், மலை உச்சியிலும், குகைப் பகுதி களிலுமே அமைந்திருக்கின்றன.

திருக்கடிகை என்று அழைக்கப்படும் சோளிங்கர், நாமக்கல், கும்பகோணம் - மன்னார்குடி மார்க்கத்தில் உள்ள வலங்கைமான் வரதராஜ பெருமாள் ஆலயம் ஆகியவற்றில் யோக நரசிம்மர் காட்சி தருகிறார்.
Tags:    

Similar News