செய்திகள்
ராஜினாமா கடிதம் அளிக்கும் நானா படோலே

மகாராஷ்டிரா மாநில சபாநாயகர் பதவியில் இருந்து நானா படோலே திடீர் ராஜினாமா

Published On 2021-02-04 21:47 GMT   |   Update On 2021-02-04 21:47 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் சபாநாயகராக இருந்த நானா படோலே தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி இணைந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பண்டாரா மாவட்டம், சகோலி தொகுதி எம்.எல்.ஏ. நானா படோலே சட்டசபை சபாநாயகராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் துணை சபாநாயகர் நர்காரி ஜிர்வாலிடம் ஒப்படைத்தார். சபாநாயகர் படோலேவின் திடீர் ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியது.

நானா படோலே மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகவும், எனவே தான் அவர் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News