செய்திகள்
ப.சிதம்பரம்

ஜம்மு, காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து- குரல் கொடுக்கும் ப.சிதம்பரம்

Published On 2020-10-17 06:05 GMT   |   Update On 2020-10-17 06:05 GMT
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370-வது அரசியல் சாசன சட்டத்தை நீக்கிய முடிவை, பா.ஜ.க. அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370-வது  அரசியல் சாசன சட்டத்தை சட்டத்திற்கு புறம்பாக நீக்கிய முடிவை, மோடி அரசு ரத்து செய்ய வேண்டும். 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நிலை நிறுத்தவும், ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும். மக்களின் உரிமைகள் நிலை நிறுத்த, ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தை சார்ந்த பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பு போரை முன்னெடுத்து இருப்பது நல்ல முன்னேற்றம். இந்திய மக்கள் அனைவராலும் இது வரவேற்கப்பட வேண்டும்.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News